Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயிரம் வருடத்தில் காணாத அடைமழை! – ஒரே நாளில் சீனாவை உலுக்கிய வெள்ளம்!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (15:13 IST)
சீனாவில் ஆயிரம் வருடங்களில் இல்லாத அளவு கனமழை ஒரே நாளில் பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஜெங்சோ மற்றும் ஹெனான் உள்ளிட்ட பகுதிகளில் அதீத கனமழை பெய்துள்ளதால் ஊரே வெள்ளக்காடாகியுள்ளது. ஜெங்சோ பகுதியில் ஒரு மணி நேரத்திற்குள்ளாக 200 மில்லி மீட்டர் மழை பெய்ததால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பெரும் வெள்ளத்தில் சாலைகளில் நின்றிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து செல்லப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த அதீத கனமழை காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர சுமார் 2 லட்சம் மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சீனாவில் கடந்த ஆயிரம் வருடத்தில் மிகப்பெரும் மழைப்பொழிவாக இது உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments