Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் இனி இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாதா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
செவ்வாய், 8 அக்டோபர் 2019 (08:26 IST)
சீன மருத்துவ கல்லூரிகளில் படிப்படியாக ஆங்கில வழிக்கல்வி பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு, சீனமொழி மருத்துவக் கல்லூரிகளாக மாற்றப்பட்டு வருவதால் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் சீனாவில் இனி மருத்துவம் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

சீனாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 200 கல்லூரிகளில் ஆங்கில வழி மருத்துவ கல்வி வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது வெறும் 45 கல்லூரிகளில் மட்டுமே சீனாவில் ஆங்கில வழி மருத்துவக்கல்வி அளிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது

ஆங்கில வழியில் கல்வி அளிப்பதற்கான மருத்துவ பேராசிரியர்களுக்கு சீனாவில் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக சீன அரசு காரணம் கூறினாலும், சீன மொழி கல்வியை கல்வியில் மட்டுமே சீன அரசு ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது

இதனால் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலிருந்து சீனாவில் மருத்துவம் படிக்க வரும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது ஆண்டொன்றுக்கு சுமார் 5 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் சீனாவில் மருத்துவம் படித்து வருகின்றனர்.

சீனாவில் மருத்துவம் படிப்பது இந்தியா உட்பட மற்ற நாடுகளில் படிப்பதைவிட மிகவும் எளிது என்பதால் அந்நாட்டில் படிக்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சீன மொழியில் மருத்துவ படிப்பை அந்நாட்டு அரசு மாற்றிக் கொண்டு வருவதால் எதிர்காலத்தில் சீனாவில் இந்தியர்கள் உட்பட மற்ற நாட்டு மாணவர்கள் மருத்துவம் படிப்பது இயலாத ஒன்றாக மாறி விடும் நிலைமை உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 தொகுதிகள் கட்டாயம் வேண்டும்: திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய துரை வைகோ..!

மதுரையில் இன்று முருகர் மாநாடு.. சிறப்பு அழைப்பாளராக பவன் கல்யாண்.. கூடுதல் பாதுகாப்பு..!

அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம்: ஈரான் எச்சரிக்கை

ஈரானை தாக்கிவிட்டு வெற்றிகரமாக திரும்பியது அமெரிக்க படை: டிரம்ப் அதிர்ச்சி தகவல்..!

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அடுத்த கட்டுரையில்
Show comments