Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்லாந்து குகையில் இருந்து சிறுவர்கள் எப்படி மீட்கப்பட்டனர்? வைரல் வீடியோ!

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (16:26 IST)
தாய்லாந்து தாம் லூங் குகையில் 15 நாட்களாக சிக்கி தவித்து வந்த 12 சிறுவர்கள் மற்றும் அவரது பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோவை தாய்லாந்து அரசு வெளியிட்டுள்ளது.   
 
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுங் என்ற 10 கிமீ நீள குகை உள்ளது. கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயது வரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியை சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்கு சாகச பயணம் சென்றனர். இந்த சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளர் ஒருவரும் சென்றார். 
 
இவர்கள் அந்த குகைக்கு சென்ற போது திடீர் மழை பெய்து வெள்ளம் நீர் குகைக்குள் புகுந்தது. நீரும், சேறும் குகையை சூழ்ந்ததால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் இவர்களை மீட்க பல முயற்சிகள் செய்யப்பட்டு சிறுவர்கள் மீட்கப்பட்டனர். 
 
இந்நிலையில் சிறுவர்களை வீரர்கள் மீட்ட வீடியோவை தாய்லாந்து கடற்படை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ உங்களுக்காக...
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments