Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூடானின் 6 மாத குழந்தைக்கு சென்னையில் அறுவை சிகிச்சை.. தாயிடம் இருந்து கல்லீரல் தானம்..!

பூடானின் 6 மாத குழந்தைக்கு சென்னையில் அறுவை சிகிச்சை.. தாயிடம் இருந்து கல்லீரல் தானம்..!

Siva

, செவ்வாய், 11 ஜூன் 2024 (11:33 IST)
பூடான் நாட்டை சேர்ந்த ஆறு மாத குழந்தைக்கு சென்னையில் அறுவை சிகிச்சை நடந்ததாகவும் இந்த அறுவை சிகிச்சைக்காக தாயிடம் இருந்து கல்லீரல் தானம் பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

பூடான் நாட்டை சேர்ந்த பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிக்கப்பட்டதை அடுத்து அந்த குழந்தைக்கு பித்த நீர் குழாய் தடைப்பட்டிருந்ததாகவும் கல்லீரலில் இருந்து வெளியேறும் பித்த நீர் வெளியேறாமல் தேங்கி விட்டதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

மிகவும் அரிதாக ஏற்படும் இந்த பிரச்சனைக்கு கொல்கத்தாவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது.

இதனை அடுத்து குழந்தையின் தாயிடம் இருந்து 300 கிராம் கல்லீரல் தானமாக பெற்று 8 மணி நேரம் மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாகவும் குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து தற்போது குழந்தை நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூடான் நாட்டின் ஆறு மாத குழந்தைக்கு சென்னையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை அடுத்து மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை!