Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டுக்கு பட்டாசு வெடிக்க தடை: ஆஸ்திரேலியா உத்தரவு!

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (08:03 IST)
ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கட்டுத்தீயால் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்கிழக்கு மாகாணங்களான விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட இடங்களில் கடந்த செப்டம்பர் முதல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. இதுவரை 9 பேர் கட்டுத்தீயில் பலியாகி உள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோலா கரடிகள் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் காட்டுத்தீ பரவுவதை தடுக்க ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா மற்றும் சில பிராந்தியங்களில் புத்தாண்டுக்கு பட்டாசுகள், வாண வேடிக்கைகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டுத்தீயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நியூ சவுத் வேல்ஸில் உள்ள சிட்னியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படவில்லை. இது மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments