Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல்! விடுவிக்கப்படுவாரா ஆங் சாங் சூகி?

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (10:41 IST)
மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் தேர்தலுக்கு முன் ஆங் சாங் சூகி விடுவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மியான்மரில் மக்களாட்சி நடந்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அங்கு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் ராணுவம் – மக்கள் மோதிக் கொண்டதில் ஏராளமான பலி ஏற்பட்டது.

இந்நிலையில் மியான்மரின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் 7012 கைதிகளை விடுவிக்க உள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ராணுவ தலைவர் மின் ஆங் “75வது சுதந்திர தினத்தையொட்டி 7012 சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். கடுமையான குற்றங்களில் ஈடுபடாதவர்களின் தண்டனை காலம் குறைக்கப்படும். இந்த ஆண்டு இறுதியில் நாட்டில் தேர்தல் நடைபெறும். அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

மியான்மர் அரசியல் தலைவர் ஆங் சாங் சூகி இந்த விடுதலையாகும் கைதிகளின் பட்டியலில் உள்ளாரா என்பது தெரியவில்லை. விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் விடுவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முடிவே இல்லையா? ஒரே நாளில் 3 இண்டிகோ விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள்: பயணிகள் அச்சம்!

உச்சக்கட்ட பாதுகாப்புடன் ரிலீஸாகிறது ‘தக் லைஃப்’! - கர்நாடக அரசு எடுத்த முடிவு!

ஜிமெயில் Unsubscribe பட்டனை கிளிக் செய்தால் எல்லாம் போச்சு: ஹேக்கர்களின் புதிய தந்திரம் - உஷார்!

ஜப்பானின் முதல் மறுபயன்பாடு ராக்கெட் சோதனை வெற்றி! சாதித்த ஹோண்டா! - விண்வெளி ஆய்வில் புதிய ஆரம்பம்!

ஜூஸ் கடைகளில் ப்ளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்த தடை! மீறினால் கடும் நடவடிக்கை! - உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments