Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு வெடித்தவருக்கு 15 லட்சம் அபராதம்

Arun Prasath
புதன், 1 ஜனவரி 2020 (15:01 IST)
சிங்கப்பூரில் பட்டாசு வெடித்த தமிழருக்கு இந்திய மதிப்பில் 15 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த அக்டோபர் மாதம் தீபாவளியன்று லிட்டில் இந்தியா என்ற பகுதியில் வசித்து வரும் தமிழரான சீனிவாசன் சுப்பையா முருகன் என்பவர் பொது இடத்தில் பட்டாசுகளை வெடித்துள்ளார். சிங்கப்பூரில் பொது இடங்களில் பட்டாசுகள் வெடிப்பது தடை செய்யப்பட்ட ஒன்று.

இந்நிலையில் சீனிவாசன் சுப்பையா மீது தொடுக்கப்பட்ட வழக்கு மீது  நடத்தப்பட்ட விசாரணையில் சீனிவாசன் சுப்பையா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதில் சீனிவாசன் சுப்பையாவுக்கு 3 ஆயிரம் சிங்கப்பூர் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 15 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments