Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது திருமணம் செய்ய ஆசை! குடும்பத்தை கொன்று கொளுத்திய கொடூரன்!

Webdunia
புதன், 22 ஜூலை 2020 (11:04 IST)
இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட ஒருவர் தனது மனைவி, குழந்தைகளை கொன்று வீட்டையும் கொளுத்திய சம்பவம் எகிப்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு திருமணமாகி மனைவியும், நான்கு குழந்தைகளும் உள்ளனர். இந்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் சமீப காலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் ஏற்கனவே திருமணமானவர். எனினும் இவர் மேல் உள்ள ஆசையால் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு வருவதாக கூறியுள்ளார். ஆனால் இதற்கு தடையாக தனது குடும்பம் இருப்பதை அந்த ஆண் உணர்ந்துள்ளார்.

இதனால் வீட்டில் உள்ள தனது தாய், மனைவி மற்றும் நான்கு குழந்தைகளையும் கழுத்தை நெறித்து இரக்கமின்றி கொன்றுள்ளார். நான்காவது பெண் குழந்தையை கழுத்தை நெரிக்கும்போது சிறுமி மயங்கி விடவே, சிறுமி இறந்ததாக எண்ணி வீட்டில் கேஸ் சிலிண்டரை திறந்து பற்றவைத்து விபத்து போல ஜோடனை செய்துள்ளார். ஆனால் மயக்கத்தில் இருந்த கடைசி மகள் நினைவு திரும்பி எப்படியோ அங்கிருந்து தப்பியுள்ளார். பிறகு இதுகுறித்து சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments