Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் அவலங்கள் - லண்டனில் இந்தியர்களை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2018 (07:42 IST)
லண்டனில் இந்திய குடும்பத்தினரை உயிரோடு எரித்துக் கொல்ல முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான கொலை வெறித்தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அன்றாடம் இந்தியர்கள் வெளிநாட்டில் தாக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியை கேட்கிறோம். இங்கிருந்து அங்கு படிக்க சென்ற மாணவர்கள், பிழைப்பு தேடி செல்வோர் மீது சில இன வெறியர்கள் கொலை வெறித் தாக்குதல்களை தொடுப்பதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.
 
இந்தியாவை சேர்ந்த மயூர் கார்லேகர் என்பவர் லண்டனில் ஆர்பிங்டன் பார்க் உட்பார்க் பகுதியில் டிஜிட்டல் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார்.
 
இந்நிலையில் நேற்றிரவு அவரது வீட்டிற்கு யாரோ சில மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர். குடுமபத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்த மயூருக்கு இது தெரியவில்லை. அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து மயூர் கார்லேகரிடம் தெரிவித்தனர். பதறியடித்துக் கொண்டு எழுந்த மயூர் உடனடியாக குடுமத்தினருடன் வீட்டிலிருந்து வெளியேறினார்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். போலீஸார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments