Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடப்படுகிறதா?

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (14:35 IST)
இந்திய பெருங்கடலில் இலங்கை அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  

இந்திய பெருங்கடலில் சற்றுமுன் 6.2 ரிக்டர் என்ற அலகில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் நாட்டின் தலைநகர் கொழும்புவில் இருந்து தென்கிழக்கு இந்திய பெருங்கடலில் 1326 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரிக்டர் அளவில் 6.2 என இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  இருப்பினும் சுனாமி எச்சரிக்கை இதுவரை விடப்படவில்லை.

இந்த நிலநடுக்கம் இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் உள்ள பல்வேறு இடங்களில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் இந்த நிலநடுக்கம் குறித்த சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments