Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (20:26 IST)
இந்தோனேசியா நாட்டில்ல் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை சுமார் 17 பேர் பலியானதாகவும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளகவும் செய்திகள் வெளிவந்துள்ளதால் அந்நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சற்றுமுன்னர் இந்தோனேசியா நாட்டின் லோம்போக் என்ற தீவு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. சுமார் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7 ஆக பதிவாகியுள்ளது. 
 
நிலநடுக்கம் காரணமாக வீடுகள் ஆட்டம் கண்டதால் மக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறினர். இதனால் சாலைகளில் மக்கள் வெள்ளம் கூடியது. மேலும் இந்தோனேசிய நாட்டின் வானிலை ஆய்வு மையம் அந்நாட்டு மக்களுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. உடனடியாக கடற்கரை பகுதியில் வாழும் மக்கள் உயரமான பகுதிக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானது: அரசிதழில் வெளியீடு!

ராணாவை நாடு கடத்தும் முயற்சியை ஆரம்பித்தது நாங்கள் தான்: ப. சிதம்பரம்

தட்கல் முன்பதிவு ரயில் டிக்கெட் நேரம் மாற்றமா? ஐஆர்சிடிசி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments