Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுரோட்டில் பிக்பாஸ் நடிகைக்கு விழுந்த அடி உதை: பெரும் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (20:14 IST)
பிரபல தொலைக்காட்சி நடிகையும், இந்தி பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டவருமான நடிகை ரூபாலி கங்குலி என்பவரை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் நடுரோட்டில் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
நடிகை ரூபாலி மும்பையில் தனது காரில் ஐந்து வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னே சென்ற மோட்டார் சைக்கிள் மீது அவருடைய கார் லேசாக மோதிவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் நடுரோட்டில் ரூபாலியின் காரை நிறுத்தி கார் கண்ணாடியை உடைத்து அவரையும் தாக்கினர். இதில் ரூபாலிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த இரண்டு இளைஞர்களும் தலைமறைவாகிவிட்டனர்.
 
ரத்த காயத்துடன் காவல்நிலையம் சென்ற ரூபாலி, மோட்டார் சைக்கிள் நபர்கள் மீது புகார் அளித்தார். இதனையடுத்து தலைமறைவாகியிருந்த இரண்டு இளைஞர்களை ஒருசில மணி நேரத்தில் போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments