Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐநா போர் ஒப்பந்தத்தை மீறி சிரிய அரசு படை தாக்குதல்- 34 பேர் பலி

Webdunia
திங்கள், 5 மார்ச் 2018 (11:49 IST)
சிரியா அரசு படைகள் ஐநாவுடன் போட்டிருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்திய தாக்குதலில் 34 பேர் பலியாகியுள்ளனர்.
 
சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் போர் தொடுத்தனர். சிரிய அதிபருக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் செயல்பட்டு வந்தது. இந்த போரில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கவுடா நகரை மீட்பதற்காக சிரிய அரசு, ராணுவ தாக்குதல் நடத்தி கொண்டிருக்கிறது.
 
இந்த தாக்குதல் காரணமாக 900 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இந்த போரில் குழந்தைகள்தான் அதிகம் இறந்துள்ளனர். இதனால் ஐநா அமைப்பு சிரிய அரசு படைகளுக்கும், கிளிர்ச்சியாளர்களுக்கும் நடுவே 5 மணி நேரம் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்தது.
 
இந்நிலையில் சிரிய அரசு போர் ஒப்பந்தத்தை மீறி நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டதாக சிரிய மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் 11 குழந்தைகள் இறந்தது குறிப்பிடதக்கது.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments