Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டத்தில் 31 பேர் பலி

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (22:45 IST)
ஈரான் நாட்டில் பெண்களுக்கு ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதை மீறுபவர்களுக்கு அங்கு சிறைத்தண்டனை கட்டாயம்.இதற்கு எதிராக ஈரான் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டுள்ளது.

ஈரான்  நாட்டில் வசிக்கும் பெண்கள் 7 வயதிற்கு மேல் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில்,  22 வயது பெண் மாசா அமினி ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்டார்.

பின், போலீஸ் காவலில் இருந்த அவர் மர்மமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து அங்கு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தற்போது சுமார் குர்கிஸ்தான்  உள்ளிட்ட 30 நகரங்களில் போராட்டம் நடந்து வருகிறது. பெண்கள் போராடி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்  ஈரானில் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதலில் 31 பே பலியாகியுள்ளாதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments