Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 141 பேர் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (15:00 IST)
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 141 பேர் உயிரிழந்தனர்.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ தலை நகர்  கின்ஷாவில் கடந்த திங்கட்கிழமை அன்று இரவில் கனமழை பெய்ததை அடுத்து, அடுத்த நாள் காலை வரை மழை தொடர்ந்தது.

இந்த நிலையில் விடிய விடிய பெய்த மழையினால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. இதில், தரைப்பாலங்கள், சாலைகள், வாகனங்கள், விலங்குகள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இதையடுத்து, அங்கு நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் பலரது வீடுகள்  மண்ணில் புதைந்தது. இதில் சிக்கி 141 பேர் உயிரிழந்தததாகத்தகவல் வெளியாகிறது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments