Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான இட்லி சாம்பார் செய்ய...!

Webdunia
தேவையான பொருள்கள்:
 
பாசிப்பருப்பு - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மிளகுத் தூள் -  1/2 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
வெந்தயத் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிது
 
தாளிக்க:
 
நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - சிறிது
செய்முறை:
 
ஒரு பாத்திரத்தில் பாசிப் பருப்பு மற்றும் அது மூழ்கும் அளவு தண்ணிர், பெருங்காயத் தூள் சேர்த்து 15 நிமிடங்கள் வேகவைத்து தனியாக  எடுத்து வைக்கவும். பின் ஒரு வாணலியில் 3 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு  வெடித்தவுடன் கறிவேப்பில்லை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கவும். பின்னர் 1 1/2 கப் தண்ணிர் சேர்த்து மிளகுத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், வெந்தயத் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். கடைசியாக வெந்த பருப்பை போட வேண்டும் .கொதித்து 2  நிமிடம் ஆனதும் மல்லித்தழையைப் போட்டு இறக்கி விடவும்.

தொடர்புடைய செய்திகள்

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

வியர்வை நாற்றத்தில் இருந்து உடலை பாதுகாக்கும் வழிமுறைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments