Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதில் உள்ள அழுக்குகளை நீக்குவதில் உள்ள ஆபத்துக்கள்...!

Webdunia
நமது காதில் அழுக்கு போன்று உண்டாகும் அந்த மெழுகு போன்ற பொருள் கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொலஸ்ட்ராலால் உருவாகிறது.
உண்மையில் நாம் அழுக்கு என எண்ணி வாராவாரம் சுத்தம் செய்து அகற்றும் இந்த மெழுகு போன்ற பொருள் தான் நமது காதினை காக்கும்  பாதுகாவலன் ஆகும்.
 
காதிலும் இறந்த செல்கள், பாக்டீரியாக்கள் போன்றவை இருக்கும். மேலும் நாம் அதிக சப்தம் கொண்டு பாடல்கள் கேட்பது காதை வலுவாக பாதிக்கும். அதிக சப்தம் மற்றும் பாக்டீரியா போன்றவற்றிடம் இருந்து காதை காக்கும் தடுப்பானாக இந்த மெழுகு போன்ற பொருள்  உதவுகிறது.
 
காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்வதால் நோய் தொற்றுக்கள் ஏற்படுத்துவதுடன் கேட்கும் திறனும் பாதிப்படைகிறது என்று மருத்துவர்கள்  தெரிவித்து வருகின்றனர்.
 
காதில் உள்ள மெழுகு போன்ற படலம் நம் காதுகளை தூசு மற்றும் மாசுக்களில் இருந்து பாதுகாக்கவே உருவாகிறது. அதனால் காதில் உள்ள தூசி மற்றும் அழுக்கை எடுக்கவோ, குறிப்பாக காட்டன் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்யவோ கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்து  வருகின்றனர்.
 
காதில் உள்ள அழுக்கை எடுக்க காது குழாய் வழியாக பட்ஸை விடும்போது, நாம் கொடுக்கப்படும் அழுத்தம், காதில் நோய் தொற்றுக்களை ஏற்படுத்துவதுடன் கேட்கும் திறனையும் பாதிக்கிறது. எனவே காதில் உள்ள மெழுகு படலம் அதிக அளவு உருவாகி காதின் மேற்புறத்தில்  வரும் போது மட்டுமே காதை சுத்தம் செய்ய வேண்டும். இதை கண்டிப்பாக நாம் எல்லோரும் கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் நம்  காது கண்டிப்பாக பாதிக்கப்படும். குறிப்பாக காட்டன் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த சோகை குறைய வேண்டுமா? தினமும் ஒரு முந்திரி பழம் சாப்பிடுங்கள்..!

நினைவாற்றல் குறைபாடு ஏற்பட என்னென்ன காரணங்கள்?

உடலில் இருக்கும் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு.. இரண்டின் வேலைகள் என்ன?

தூக்கம் வரவில்லை என்றால் தூக்க மாத்திரை வேண்டாம்.. இதோ இயற்கையான சில பொருட்கள்..!

முகம் பளிச்சென மாற வேண்டுமா? கடுக்காய் பொடி ஒன்று இருந்தால் போதும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments