பான்கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி? – ஆன்லைன் மூலம் ஈஸியாக செய்யலாம்!

Webdunia
திங்கள், 17 பிப்ரவரி 2020 (19:43 IST)
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு மார்ச் இறுதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் ஆதார் இணைக்காமல் உள்ளனர்.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி 17.58 கோடி பேர் பான் மற்றும் ஆதாரை இணைக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. மார்ச் இறுதி வரை மட்டுமே காலக்கெடு என்றாலும் பலர் ஆதார் எண் மற்றும் பான் எண்ணை இணைப்பது குறித்து சரியாக தெரியாததால் காலதாமதம் செய்து வருகின்றனர். ஆன்லைன் மூலமாக செலவின்றி எளிதாக பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு..

முதலில் https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.

அதில் இடது ஓரத்தில் Link Aadhar என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும்

அதில் பான் எண், ஆதார் எண், ஆதாரில் உள்ளபடி பெயர் போன்றவற்றை உள்ளீடு செய்து இறுதியாக Link Aadhar என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும்.

ஆதார் எண் இணைக்கப்பட்டதும் மொபைல் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும்.

ஏற்கனவே இந்த வசதியை பயன்படுத்தி பதிவு செய்திருந்தால் அதன் ஸ்டேட்டசை இந்த பகுதியிலேயே சரிபார்த்தும் கொள்ள முடியும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...

திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..

சிந்து நதிக்கு அடுத்து ரவி நதியும் இல்லை!.. பாகிஸ்தானுக்கு இந்தியா செக்!...

7 வயது சிறுமியை கொன்று பிளாஸ்டிக் பேரலில் சடலத்தை மறைத்து வைத்த பக்கத்து வீட்டுக்காரர்.. அதிர்ச்சி சம்பவம்..!

தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரி தனி விமானத்தில் சென்றதால் பிரச்சனையா? சட்டமன்றத்தில் கடும் விவாதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments