Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிஎஸ்டிக்கு பின் வெளியாகும் முதல் பட்ஜெட்

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2017 (18:15 IST)
2018-2019 நிதியாண்டிற்கான பட்ஜெட் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு பின் முதல் பட்ஜெட் என்பதால் அனவரும் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.


 

 
150 ஆண்டு கால மரபை உடைத்து தற்போது நரேந்திர மோடி தலைமையிலான அரசு நிதியாண்டை ஜனவரி-டிசம்பர் காலமாக மாற்றியுள்ளது. அதன்படி பட்ஜெட் தொடர்பான் கூட்டத் தொடர் இந்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
 
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன் வெளியாகும் முதல் பட்ஜெட் என்பதால் அனைவரிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
 
பணமதப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவின் சந்தை மதிப்பு சரிவை கண்டது. இந்திய பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது. இதனால் இந்த முறை பட்ஜெட் அதிரயாக இருக்கும் என கூறப்படுகிறது. 
 
அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெரும்பாலான பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டது. 50 பொருட்களுக்கு மட்டுமே தற்போது 28% வரி விதிக்கப்படுகிறது. தற்போது 2018-2019 நிதியாண்டிற்கான வெளியாகும் பட்ஜெட்டில் வரி விகிதத்தில் மீண்டும் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments