Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லீனா மணிமேகலையிடம் 1 ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சுசி கணேசன் வழக்கு

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2018 (11:31 IST)
பாலியல் புகார் கூறிய  இயக்குநர் லீனா மணிமேகலைக்கு எதிராக 1 ரூபாய் நஷ்டஈடு கேட்டு இயக்குனர் சுசி கணேசன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

‘‘மி டூ’’ ஹேஷ்டேக்  மூலம் நடிகைகள், பாடகிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் குறித்து  டிவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,  இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக டிவிட்டரில் இயக்குநர் லீனா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார், இதனால் அதிர்ச்சி அடைந்த சுசி கணேசன்,  தன் மீது பொய்யான புகார் தெரிவித்ததாக ஏற்கனவே லீனா மணிமேகலைக்கு எதிராக சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து தன் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் எந்த ஒரு அடிப்படை ஆதாரமின்றி பொய்யான  குற்றச்சாட்டை இயக்குநர் லீனா மணிமேகலை தெரிவித்ததாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் 1 ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு இயக்குனர் சுசி கணேசன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்