Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பரில் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம்!

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (12:54 IST)
பாலிவுட்டின் நட்சத்திர காதல் ஜோடிகளான தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் திருமணம் நவம்பரில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்  திரையுலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்கள் இவ்வாண்டு இறுதிக்கு இருவரும் திருமணம் செய்துக்கொள்ளலாம் என தகவல் வெளியானது. இருவீட்டாரும் திருமண வேலைகளில்  ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இப்போது தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் ஜோடிக்கு நவம்பரில் திருமணம் நடக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோன், ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொள்ளும் தேதியை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

திருமண அழைப்பிதழ் வடிவில் அவர் வெளியிட்டுள்ள தகவலில் ‘எங்கள் குடும்பாத்தாருடன் ஆசிகளுடன் எங்கள் திருமணம் நவம்பர் 14,15 தேதிகளில் நடைபெறும் என்பதை  தெரிவித்து கொள்கிறேன். இத்தனை காலமாக எங்கள்மீது நீங்கள் தொடர்ந்து காட்டிவரும் அன்புக்கு நன்றி தெரிவிப்பதுடன், இந்த வாழ்க்கை தொடங்கப்போகும் எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்’ இவ்வாறு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்