Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப.சிதம்பரம் வீட்டில் திருடிய இரண்டு பெண்கள் கைது

Webdunia
புதன், 11 ஜூலை 2018 (07:46 IST)
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் நுங்கம்பாக்கம் வீட்டில் நகை, பணம் மற்றும் பட்டுப்புடவைகள் திருடு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
 
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். முதல்கட்டமாக ப.சிதம்பரம் வீட்டில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் பின்னர் வீட்டில் வேலை செய்த பணியாளர்களை விசாரணை செய்தனர். அப்போது வீட்டில் பணிபுரிந்த வெண்ணிலா, விஜி ஆகிய இருவரின் மீது போலீசார்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
 
இதனையடுத்து இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் பொருட்களை திருடியதை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து, வெண்ணிலா, விஜி இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான நகை, ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் 6 பட்டுப்புடவைகளை பறிமுதல் செய்தனர். இருவரிடம் மீண்டும் விசாரணை செய்த போலீசார் அதன் பின்னர் இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments