Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப.சிதம்பரம் வீட்டில் நகை - பணம் திருடிய பெண்கள் கைது

Webdunia
புதன், 11 ஜூலை 2018 (07:41 IST)
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வீட்டில் நகை பணம் திருடிய வேலைக்கார பெண்களை போலீசார் கைது செய்தனர். 
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பைகிராப்ஸ் தோட்டச்சாலையில் உள்ளது.
 
இந்நிலையில் அவரது வீட்டிலிருந்த  ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் ரொக்கமும் வைர நகைகளும் திருடுபோனதாக ஆயிரம் விளக்கு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. 
 
புகாரின்பேரில் விசாரித்து வந்த போலீஸார் சிதம்பரத்தின் வீட்டில் கடந்த 10 வருடமாக வேலை செய்து வந்த சகோதரிகளான வெண்ணிலா, விஜி ஆகியோர் தான் இந்த திருட்டு வேலையில் ஈடுபட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார் திருடிய நகைகளையும், பணத்தையும் மீட்டனர். பின் அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு மசோதா.. 2வது முறையாக திருப்பி அனுப்பிய கவர்னர்..!

ஈபிஎஸ் - எல்.கே. சுதீஷ் திடீர் சந்திப்பு.. கூட்டணியா? ராஜ்யசபா தொகுதி பேச்சுவார்த்தையா?

சசிதரூரின் ஒரே ஒரு நாள் பேச்சு: பாகிஸ்தான் ஆதரவை திரும்ப பெற்ற கொலம்பியா..!

தங்கம் , வெள்ளி விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை விலை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments