7 பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுனர் எடுத்த முக்கிய நடவடிக்கை: திடீர் சிக்கலா?

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2018 (18:20 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு ஆளுனருக்கு பரிந்துரை செய்து விடுதலை செய்யலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அறிவித்தது

இதன்படி சமீபத்தில் கூடிய தமிழக அமைச்சரவை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களையும் விடுதலை செய்ய ஆளுனருக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் தமிழக ஆளுனர் பன்சாரிலால் புரோஹித் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என தமிழகமே எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தது

இந்த நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுப்பி வைத்துள்ளார். ஏற்கனவே மத்திய அரசு இந்த விடுதலையை எதிர்த்துள்ள நிலையில் தமிழக ஆளுனர் இந்த பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதால் 7 பேர் விடுதலையில் சிக்கல் நீடிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக்கில் டைம் பாம்!.. குண்டு வெடித்து 2 பே மரணம்!.. பாகிஸ்தானில் சோகம்!..

இஸ்ரேல் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு!. மூவருக்கு தூக்கு தண்டனை...

திரிஷா விஷயத்தில் மௌனம் ஏன்?.. பாஜகவை பார்த்து பயமா?... வன்னியரசு கேள்வி!..

வாய் தவறி திரிஷாவை பற்றி பேசிட்டேன்!.. மன்னிப்பு கேட்ட நயினார் நாகேந்திரன்!...

தாயின் மகப்பேறு கால போட்டோஷூட்.. 3 வயது சிறுவன் எதிர்பாரா விபத்தில் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments