7 பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுனர் எடுத்த முக்கிய நடவடிக்கை: திடீர் சிக்கலா?

Webdunia
வியாழன், 13 செப்டம்பர் 2018 (18:20 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு ஆளுனருக்கு பரிந்துரை செய்து விடுதலை செய்யலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அறிவித்தது

இதன்படி சமீபத்தில் கூடிய தமிழக அமைச்சரவை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களையும் விடுதலை செய்ய ஆளுனருக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் தமிழக ஆளுனர் பன்சாரிலால் புரோஹித் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என தமிழகமே எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தது

இந்த நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுப்பி வைத்துள்ளார். ஏற்கனவே மத்திய அரசு இந்த விடுதலையை எதிர்த்துள்ள நிலையில் தமிழக ஆளுனர் இந்த பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதால் 7 பேர் விடுதலையில் சிக்கல் நீடிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments