ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு நாட்டின் அமீரகத்தில் நடந்து வருகிறது. தாய்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்தியா, அடுத்த ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் தரவரிசையில் 97வது இடத்தில் உள்ள இந்திய அணி தனது கடைசி லீக்கில் 113ம் நிலையில் உள்ள பக்ரைன் அணியுடன் மோதியது. இதில் டிரா செய்தாலே இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும் என்ற நிலையில், இந்தியா தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டது.
இந்த ஆட்டம் முடிய 3 நிமிடம் இருந்த நிலையில், பெனால்டி ஷுட் வாய்ப்பில் பக்ரைன் கோல் அடித்தது. முடிவில் 1-0 என பக்ரைன் வெற்றி பெற்றது. இதையடுத்து ஏ பிரிவில் முதல் இடம் பிடித்த யுஏஇ, தாய்லாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்தியா கடைசி இடம் பிடித்து வெளியேறியது.
இன்று கிரிகிஸ்தான்-பிலிப்பைன்ஸ், தென்கொரியா-சீனா, ஈரான்-ஈராக், வியட்நாம்-ஓமன் அணிகள் மோதுகிறது.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!