Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இரண்டாவது 8 வழிச்சாலை: அமைச்சர் ஆர்.பி.,உதயகுமார் அறிவிப்பு

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (08:06 IST)
சென்னை-சேலம் பசுமை  8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்தை எதிர்க்கும் பலர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.
 
இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு 8 வழிச்சாலை அமைக்க திட்டம் உள்ளதாக நேற்று சட்டமன்றத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். சென்னை-சேலம் 8 வழிச்சாலையை அடுத்து மதுரை - தஞ்சாவூர் இடையே 8 வழிச்சாலை திட்டம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், படிப்படியாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும்' என்றும் கூறினார். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு மதுரை, தஞ்சை மக்களிடையே என்னவிதமான ரியாக்சன் ஏற்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
மேலும் திண்டுக்கல் - பொள்ளாச்சி இடையே 6 வழி சாலை திட்டத்திற்கு நிலம் எடுப்பு பணி முடிந்துவிட்டதாகவும், அங்கு சாலை அமைக்கப்படும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 
 
அதேபோல் சாலை அமைக்க நிலம் கொடுப்பவர்களுக்கு புதிய நில எடுப்பு சட்டத்தின்படி இழப்பீடு வழங்கப்படும் என்றும் ரோடு போடுவதற்காக இடம் கொடுத்த மக்களை அரசு ரோட்டில் விடாது என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments