துணை முதல்வர் ஓபிஎஸ்-க்கு வந்த சம்மன்: அதிமுகவில் பரபரப்பு

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (22:49 IST)
ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்களை விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சில மாதங்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. மாநில அமைச்சர்கள், ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது
 
இந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன் ஓபிஎஸ் விரைவில் ஆஜராவார் எறு கூறப்பட்ட நிலையில் அவர் வரும் 19-ம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஜெயலலிதா மறைவின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் எதிரும் புதிருமாக இருந்தனர். ஆனால் தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்-ம், துணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ்-ம் உள்ளதால் ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜராகி ஓபிஎஸ் எந்தவிதமான வாக்குமூலத்தை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
 
ஓபிஎஸ் அவர்களிடம் நடத்தும் விசாரணையுடன் இந்த ஆணையத்தின் விசாரணை முடிவடைய உள்ளதாகவும், அதனையடுத்து விரைவில் தமிழக அரசுக்கு ஆணையம் அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தரைப்பகுதியிலும் தாக்குதல்.. குர்தீஷ் போராளிகளுக்கு உதவும் அமெரிக்கா.. தப்பிக்க முடியாத ஈரான்..!

காங்கிரஸை நம்பி நான் கட்சி ஆரம்பிக்கல.. எதுவானாலும் பாத்துகிடலாம்.. அதீத நம்பிக்கையுடன் விஜய்..!

திமுக, அதிமுக, தேமுதிக, பாமக எம்.பி.க்கள் யார் யார்?.. இன்று வேட்புமனு தாக்கல்!..

அதை நான் திட்டமிட்டு செய்யவில்லை, தானாகவே முடிந்தது.. காங்கிரஸ் கூட்டணி குறித்து முதல்வர்..!

காங்கிரஸை அசால்ட்டா டீல் பண்ணி ஸ்கோர் பண்ணிய ஸ்டாலின்!.,. கோட்டைவிட்ட பழனிச்சாமி..

அடுத்த கட்டுரையில்
Show comments