Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை முதல்வர் ஓபிஎஸ்-க்கு வந்த சம்மன்: அதிமுகவில் பரபரப்பு

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (22:49 IST)
ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்களை விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சில மாதங்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. மாநில அமைச்சர்கள், ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது
 
இந்த நிலையில் இந்த ஆணையத்தின் முன் ஓபிஎஸ் விரைவில் ஆஜராவார் எறு கூறப்பட்ட நிலையில் அவர் வரும் 19-ம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஜெயலலிதா மறைவின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் எதிரும் புதிருமாக இருந்தனர். ஆனால் தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்-ம், துணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ்-ம் உள்ளதால் ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜராகி ஓபிஎஸ் எந்தவிதமான வாக்குமூலத்தை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
 
ஓபிஎஸ் அவர்களிடம் நடத்தும் விசாரணையுடன் இந்த ஆணையத்தின் விசாரணை முடிவடைய உள்ளதாகவும், அதனையடுத்து விரைவில் தமிழக அரசுக்கு ஆணையம் அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments