நண்பர்கள் வேறு பள்ளியில் சேர்ந்ததால் பிளஸ்-1 மாணவன் தற்கொலை

Webdunia
புதன், 6 ஜூன் 2018 (15:48 IST)
நண்பர்கள் வேறு பள்ளியில் சேர்ந்ததால் பிளஸ்-1 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு சகிப்புத்தன்மை, பொறுமை என்பது இருப்பதே இல்லை. எதற்கெடுத்தாலும் அவசரம். எதையுமே உடனடியாக அடைய வேண்டும் என்ற எண்ணம். அப்படி அவர்கள் நினைத்தது நடக்காவிடில், தற்கொலை செய்துகொள்ளும் தப்பான முடிவை எடுக்கின்றனர்.
 
இந்நிலையில் சென்னை கோயம்பேடு சீமாத்தம்மன் நகர் 8-வது தெருவைச் சேர்ந்த அப்பள வியாபாரியான ஆரோக்கியசாமியின் மகன் ஸ்டீபன்ராஜ் 11-ம் வகுப்பு புதிய பள்ளியில் சேர்ந்தார்.

அவருடன் 10 ஆம் வகுப்பு வரை படித்த அவரது நண்பர்கள் பிரிந்து வெவ்வேறு பள்ளியில் சேர்ந்னர். நண்பர்களை பிரிந்த ஸ்டீபன்ராஜ் சில நாட்களாக மனவேதனையில் இருந்தார்.
 
இந்நிலையில் ஸ்டீபன்ராஜ், வீட்டில் யாருமில்லா நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஸ்டீபன்ராஜின் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலுக்கே மோசம்!.. அதிக தொகுதிகளை கேட்கும் கூட்டணி கட்சிகள்!.. அப்செட்டில் பழனிச்சாமி!...

தவெக.. திமுக.. கூட்டணியில் இரண்டு குரல்கள்!. தமிழக காங்கிரஸில் பிளவு ஏற்படுமா?...

தவெகவுக்கு ஆதரவு இருக்கு!. திமுக கூட்டணில் குண்டு போடும் கிரிஷ் சோடங்கர்

திமுகவுடன் பேசியிருக்கிறோம்!.. பேரம் பேசவில்லை!.. திருமாவளவன் பேட்டி..

அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு ரேடாரை அழித்துவிட்டோம்: ஈரான் அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments