Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நண்பர்கள் வேறு பள்ளியில் சேர்ந்ததால் பிளஸ்-1 மாணவன் தற்கொலை

Webdunia
புதன், 6 ஜூன் 2018 (15:48 IST)
நண்பர்கள் வேறு பள்ளியில் சேர்ந்ததால் பிளஸ்-1 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு சகிப்புத்தன்மை, பொறுமை என்பது இருப்பதே இல்லை. எதற்கெடுத்தாலும் அவசரம். எதையுமே உடனடியாக அடைய வேண்டும் என்ற எண்ணம். அப்படி அவர்கள் நினைத்தது நடக்காவிடில், தற்கொலை செய்துகொள்ளும் தப்பான முடிவை எடுக்கின்றனர்.
 
இந்நிலையில் சென்னை கோயம்பேடு சீமாத்தம்மன் நகர் 8-வது தெருவைச் சேர்ந்த அப்பள வியாபாரியான ஆரோக்கியசாமியின் மகன் ஸ்டீபன்ராஜ் 11-ம் வகுப்பு புதிய பள்ளியில் சேர்ந்தார்.

அவருடன் 10 ஆம் வகுப்பு வரை படித்த அவரது நண்பர்கள் பிரிந்து வெவ்வேறு பள்ளியில் சேர்ந்னர். நண்பர்களை பிரிந்த ஸ்டீபன்ராஜ் சில நாட்களாக மனவேதனையில் இருந்தார்.
 
இந்நிலையில் ஸ்டீபன்ராஜ், வீட்டில் யாருமில்லா நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஸ்டீபன்ராஜின் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments