திமுகவிற்கு ஆறுதல் தந்த சென்னை வாசிகள்

Webdunia
வியாழன், 19 மே 2016 (12:23 IST)
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு முடிவுகள், சென்னை மாநகரம் திமுகவின் கைவசத்தில் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளது.


 

 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. 
 
இன்று காலை 8 மணியளவில் தபால் ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது. அதில் துவக்கும் முதல் திமுக முன்னனியில் இருந்தது. ஆனால் போகப் போக அதிமுக ஏறு முகம் காட்டியது. 
 
அதன்பின் எண்ணப்பட்ட வாக்குகளின் முடிவிலும் அதிமுகவே முன்னனியில் இருந்து வருகிறது. அதிமுக 130 தொகுதியிலும், திமுக 95 தொகுதியிலும் முன்னனியில் இருக்கிறது. எனவே ஏறக்குறைய அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.
 
இருந்தாலும், 16 தொகுதிகள் கொண்ட சென்னையில் 11 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. அண்ணாநகர், விருகம்பாக்கம், வேளச்சேரி, கொளத்தூர், சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், ராயபுரம், ஆயிரம் விளக்கு தொகுதிளில் திமுக முன்னனியில் இருக்கிறது.
 
இதனால், சென்னை  திமுகவின் கோட்டை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக கூட்டணியில் ராமதாஸ்!. அன்புமணி போட்ட 3 கண்டிஷன்கள்!...

ஸ்டாலின்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்!.. ரஜினிகாந்த் ஓப்பன் டாக்!..

பிரேமலதா கேட்கும் தொகுதிகள்!.. துக்கம் இழந்த கூட்டணி எம்.எல்.ஏக்கள்!..

பழிக்கு பழி!..இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்!.. உயிர் தப்பினாரா நெதன்யாகு?..

அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு இந்தியா இரங்கல் தெரிவிக்காதது ஏன்? இந்தியாவுக்கு எதிராக கருத்து சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments