Publish Date: Mon, 03 Sep 2018 (11:26 IST)
Updated Date: Mon, 03 Sep 2018 (11:36 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் எலிமினேசனில் ஜனனியும், டேனியலும் இருந்தனர். இருவரும் தனித்தனியாக ஒரு அறையில் அடைக்கப்பட்டனர்.
அந்த இரு அறைகளின் சாவிகளும் கதவின் முன்பாக அமைக்கப்பட்டிருந்தது. அதை ஒவ்வொருவராக திறந்து பார்த்தனர். திறக்க முடியவில்லை இறுதியில் சென்றாயன் டேனியின் அறையை திறந்து விட்டார். அதன் பின்னர் கமலும் தன் கையிலிருந்த அட்டையில் டேனியல் பெயர் இருப்பதை காட்டினார்.
இதைத்தொடர்ந்து மகிழ்ச்சியுடன் டேனியல் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறினார். அப்போது பிக்பாஸ் இல்லத்தில் இருந்த சக போட்டியாளர்கள் டேனியலை கட்டி ஆரத்தழுவி வழி அனுப்பி வைத்தனர்.