Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம்: வீதியில் தஞ்சம் புகுந்த கனடா மக்கள்

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (20:49 IST)
கனடா நாட்டில் ஒருசில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளில் தங்க பயந்து கொண்டு வீதியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

கனடா நாட்டின் மேற்கு கடற்கரைப் பகுதியில் இன்று காலை முதல் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறியடித்து கொண்டு வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். முதல் நிலநடுக்கம் இன்று காலை உணரப்பட்டதாகவும், இது 6.6 என்ற ரிக்டர் அளவிலும் இருந்ததாகவும், இதனையடுத்து ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் 6.8 ஆகவும் பதிவானதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மூன்றாவதாக அடுத்த அரை மணி நேரத்தில் கனடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் மீண்டும் அதே பகுதியில் 15 நிமிட இடைவெளியில் 4வது நிலநடுக்கமும் உணரப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments