Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏஆர் ரஹ்மானை பிரிந்தது ஏன்? சாய்ரா பானு விளக்கம்..!

Siva
ஞாயிறு, 24 நவம்பர் 2024 (15:24 IST)
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாய்ராம் பானு ஆகிய இருவரும் பிரிவதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களது பிரிவு குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப்களில் அவதூறான கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையே ஏஆர் ரஹ்மான் நேற்று வழக்கறிஞர் மூலம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தங்களது பிரிவுக்கான காரணத்தை அவர் இதுவரை வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் சாய்ரா பானு தற்போது தனது கணவரை ஏன் பிரிந்தேன் என்பதற்காக விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:

கடந்த 2 மாதமாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறேன். எனது உடல்நல கோளாறு யாருக்கும் பிரச்சினையாக இருந்துவிட கூடாது. எனது உடல்நிலையால் ஏ.ஆர்.ரஹ்மானின் பணிகள் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதற்காக பிரிந்து வாழ முடிவெடுத்தேன்.

எங்கள் பிரிவு குறித்து யாரும் தவறான, கீழ்த்தரமான கருத்துக்களை பரப்ப வேண்டாம். ஏ.ஆர்.ரஹ்மான் உலகிலேயே தலைசிறந்த மனிதர். எங்கள் இருவருக்கும் தற்காலிகமாக ஒரு இடைவெளி தேவைப்பட்டதால் பிரிந்து இருக்கிறோம்.

எதையும் நாங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் விரைவில் சென்னை திரும்புவேன்’ என்று ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தது ஏன்? என சாய்ரா பானு விளக்கம் அளித்துள்ளார்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments