Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் நல்ல நடிகர்: ஹேமா ருக்மணி ஐஸ் வைப்பது ஏன்?

Webdunia
ஞாயிறு, 26 நவம்பர் 2017 (09:48 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல் படத்தை பிரமாண்டமாக தயாரித்த தேனாண்டாள் நிறுவனம், அடுத்ததாக சங்கமித்ரா மற்றும் எஸ்.ஜே.சூர்யா படங்களை தயாரித்து வருகிறது. மேலும் கார்த்திக் சுப்புராஜ்-தனுஷ் இணையும் படத்தையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமாருக்மணி, 'அஜித் ஒரு நல்ல நடிகர் என்றும், அவருடைய நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும் என்றும் கூறினார். மேலும் அஜித் விரும்பினால் அவர் நடிக்கும் படத்தையும் தங்கள் நிறுவனம் தயாரிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

'மெர்சல்' திரைப்படம் நல்ல வசூலை பெற்ற போதிலும், படத்தின் பட்ஜெட் எகிறிய காரணத்தால் எதிர்பாத்த லாபம் தேனாண்டாள் நிறுவனத்திற்கு கிடைக்கவில்லை என்றும் அதன் காரணமாகவே அஜித் படத்தை தயாரிக்க அந்நிறுவனம் முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள 'விசுவாசம்' படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments