Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாருக்கும் சம்பளம் இல்லை… புதுமுறையில் சினிமா தயாரிப்பு – முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி!

Webdunia
வெள்ளி, 22 மே 2020 (07:44 IST)
கொரோனா ஊரடங்கால் சினிமாத்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சத்யராஜை வைத்து கே எஸ் ரவிக்குமார் இயக்கும் படம் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட உள்ளது.

கொரோனாவால் சினிமா துறை கடந்த 2 மாதங்களுக்கு மேல் முடங்கியுள்ளது. இதனால் வரும் காலங்களில் சினிமா தயாரிப்பு முறைகளில் பெரிய மாற்றம் வரும் என சொல்லப்படுகிறது. அதை மெய்ப்பிக்கும் விதமாக விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமன்யம் மற்றும் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி ஆகியோர் கூட்டணியில் 2 கோடி ரூபாய் செலவில் புதிய படம் ஒன்று தயாரிக்கப்பட உள்ளது.

இந்தப் படத்தை இயக்குபவர் கே.எஸ்.ரவிக்குமார். நாயகன் சத்யராஜ். கதையில் முக்கியமான சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் பங்குபெறும் யாருக்கும் சம்பளம் என்று கிடையாது. முதலில் போட்ட பட்ஜெட்டில் படத்தை முடித்துவிட்டு ரிலீஸுக்கு பின் வரும் பணத்தில் அவரவரின் சந்தை மதிப்புக்கு ஏற்றவாறு  ஒரு தொகை அளிக்கப்படும். மேலும் படத்தின் பட்ஜெட்டான 2 கோடியையும் 200 பங்குகளாகப் பிரித்து விற்பனை செய்ய உள்ளனராம். அதன் மூலம் ஒருவர் அதிகபட்சமாக 10 பங்குகளை வாங்கிக்கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments