Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்காக 10 ஆயிரம் வரிகள் கவிதை எழுதிய வெறித்தனமான ரசிகர்.. 36 மணி நேரத்தில் சாதனை..!

Siva
ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (10:01 IST)
திருப்பத்தூரைச் சேர்ந்த நபர் ஒருவர் நடிகர் விஜய்க்காக 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகள் கொண்ட கவிதையை எழுதியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
 
திருப்பத்தூர் அடுத்த ஜடையனூர் பகுதியை சேர்ந்தவர் கதிர். இவர் தீவிர விஜய் ரசிகரான இருந்து வரும் நிலையில் கடந்த 16-ஆம் தேதி நடிகர் விஜய்க்காக 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகளுடன் முழு கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
 
ஏப்ரல் 16ஆம் தேதி காலை 11 மணிக்கு கவிதை எழுத தொடங்கிய கதிர், ஏப்ரல் 17ஆம் தேதி இரவு 11 மணி வரை 36 மணி நேரம் இடைவிடாமல் சுமார் 10 ஆயிரம் வரிகள் அடங்கிய ஒரு முழு கவிதையை எழுதி சாதனை படைத்துள்ளார். நடிகர் விஜய்க்காக கவிதை எழுதி சாதனை படைத்த கதிருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
இதனையொட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் ஃபியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட் ஆகிய அமைப்புகளின் சார்பில், கில்லி திரைப்படத்தின் மறுவெளியீட்டு தினத்தன்று விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சேலையில் கிளாமர் போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

பிரேமம் நாயகி மடோனாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

எதிர்காலத்தில் நடக்கும் கதையா விஜய்யின் கோட் திரைப்படம்?

விஜய் பிறந்தநாளில் இணையத்தில் வைரலாகும் அஜித் புகைப்படங்கள்!

ஜெயிலர் 2 படத்தை உறுதி செய்த ரஜினியின் மக்கள் தொடர்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments