Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வில்லனாக களமிறங்குகிறார் வெங்கட்பிரபு

வில்லனாக களமிறங்குகிறார் வெங்கட்பிரபு
, புதன், 31 மே 2017 (06:44 IST)
பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிக்கும் அடுத்த படம் 'ஆர்.கே.நகர்' என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வில்லனாக நடிக்க வெங்கட்பிரபு ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.



 


முரளி கார்த்திக் இயக்கத்தில் கலையரசன், அபிராமி ஐயர் நடிக்கும் படம் 'களவு'. இந்தா படத்தில் ஆக்ரோஷமான வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளாராம் வெங்கட்பிரபு. ஏற்கனவே அவர் இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. போலீஸ் கேரக்டர் தான் ஆனால் வில்லன் கேரக்டர் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். இப்படியே போனால் அவர் முழு நேர நடிகராகிவிடுவார் என்று அவரது தரப்பினர் கூறி வருகின்றனர்.

கருணாகரன், பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், மிமி கோபி உள்பட பலர் நடித்து வரும் 'களவு' திரைப்படம் ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என்றும், இந்த படத்தின் நாயகன், நாயகிக்கு நிகழ்ந்த ஒரு சிறு சம்பவம், அவர்களுடைய வாழ்க்கையை எப்படி தலைகீழாக மாற்றியது என்பதுதான் இந்த படத்தின் கதை என்று இயக்குனர் முரளி கார்த்திக் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூன் 1 முதல் மீண்டும் களம் இறங்குகிறார் அஜித்!