Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரப்பன் வாழ்ந்த காட்டில் பணப்புதையல் உள்ளது… மகள் கருத்து!

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (08:48 IST)
வீரப்பனின் இளையமகள் விஜயலட்சுமி சத்தியமங்கலம் காடுகளில் பணப்புதையல் இருப்பது உண்மைதான் எனக் கூறியுள்ளார்.

2004 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார் சந்தனக் கடத்தல் வீரப்பன். அவருக்கு இரண்டு விஜயதாரணி மற்றும் விஜயலட்சுமி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் விஜயதாரணி பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். இளைய மகள் விஜயலட்சுமி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் விஜயலட்சுமி நடிப்பில் மாவீரன் பிள்ளை என்ற திரைப்படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் விஜயலட்சுமி வீரப்பனைப் போன்றே கையில் துப்பாக்கி மற்றும் சீருடை அணிந்து காணப்படுகிறார். இது வீரப்பனின் வாழ்க்கை வரலாறா அல்லது விஜயலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று படமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது சம்மந்தமான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட விஜயலட்சுமி ‘சத்தியமங்கலம் காடுகளில் பணப்புதையல் இருக்கிறது என்று சொல்லப்படுவது உண்மைதான்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments