Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீமான் மகனுக்கு கவிதையால் வாழ்த்து கூறிய வைரமுத்து!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (11:00 IST)
சீமான் மகனுக்கு வாழ்த்து தெரிவித்து வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதிய கவிதை தற்போது வைரலாகி வருகிறது 
 
முன்னாள் அதிமுக அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழி என்பவரை திருமணம் செய்து கொண்ட சீமானுக்கு ஒரு மகன் உள்ளார் 
 
அவர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோவை பார்த்த வைரமுத்து, சீமான் மகனுக்கு எழுதிய வாழ்த்து கவிதையில் கூறியிருப்பதாவது:
 
காளிமுத்து பேரன்
செந்தமிழன் சீமானின்
திருச்செல்வன் மாவீரன்
தமிழாற்றுப்படையோடு
உறவாடி விளையாடும்
ஒளிப்படங்கள் கண்டேன்
 
நாளையொரு பூமலர
நல்லதமிழ்த் தேன்சிதற
வாழையடி வாழையென
வளருமடா தமிழ்க்கூட்டம்
என்று வாய்விட்டுச்
சொல்லிக்கொண்டேன்
 
தமிழாற்றுப்படையோடும் 
தமிழர் படையோடும்
வா மகனே!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகிய லைலா ‘மடோனா செபாஸ்டியனின்’ ரீசண்ட் க்ளிக்ஸ்!

பட்டுப்புடவையில் வெட்கச் சிர்ப்பில்… ஐஸ்வர்யா ராஜேஷின் அழகிய க்ளிக்ஸ்!

ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் படம்… ஷூட்டிங் எப்போது?

நாங்கள் நிறைய ஜானர்களை விவாதித்தோம்… ஆனா கமல் சார் சொன்னது இதுதான் –அன்பறிவ் இயக்குனர்கள் பகிர்வு!

ஹீரோவாகிவிட்டார் விஜய் டிவி பூவையார்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments