Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேச்சுவார்த்தை சுமூகம்… ஷங்கருக்கு 4 கோடி கொடுக்கும் வடிவேலு!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (13:16 IST)
இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தின் பிரச்சனையில் சுமூகமாக பேச்சுவார்த்தை முடிய உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் வடிவேலு 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்கவில்லை. இடையில் சில படங்களில் நடித்திருந்தாலும் எதுவும் அவர் பெயர் சொல்லும் படங்களாக அமையவில்லை. இந்நிலையில் தனது வெற்றிப்படமான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் தொடர்ந்து நடிக்க மறுத்தார். இதனால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டது.

இந்நிலையில் இப்போது முன்னணி தயாரிப்பாளர்கள் சிலர் சேர்ந்து அந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்துகின்றனராம். மேலும் இந்த பிரச்சனைகள் விரைவில் முடிக்கப்பட்டு வடிவேலு வரிசையாக படங்களில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

இதன் மூலம் படத் தயாரிப்பாளரான ஷங்கருக்கு ஏற்பட்ட நஷ்டத்தில் 4 கோடியை வடிவேலு தர சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடிவேலுவால் ஷங்கருக்கு 7 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பையும் இணைத்து வைத்தது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

7 கோடி சம்பளம் வாங்குபவர் ஏன் இளையராஜா இசையை பயன்படுத்த வேண்டும்? கங்கை அமரன்

படம் வெளியாகும்போது மட்டும் தான் இந்து கடவுள்கள் ஞாபகம் வருமா? சூர்யாவுக்கு குவியும் கண்டனங்கள்..!

திருமண நிகழ்ச்சியை கூட காசுக்காக விற்கும் பிரபலங்கள்.. லேட்டஸ்ட் ஜோடி அமீர் - பாவனி..!

இப்படி ஒரு விஷயம் இருப்பதே எனக்குத் தெரியாது.. வெற்றிமாறன் அண்ணன்தான் சொன்னார்- மண்டாடி படம் குறித்து சூரி!

மீண்டும் இணையும் மாரி செல்வராஜ்- ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி.. எந்த படத்தில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments