Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இணையும் வடிவேலு சுந்தர் சி காம்போ – இந்த படத்தின் பார்ட் 2 தான்!

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (08:05 IST)
வடிவேலுவின் ஹிட் இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி யுடன் விரைவில் உருவாக இருக்கும் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

வடிவேலுவின் சினிமா வாழ்க்கையில் அவருக்கு ஒரு மைல்கல்லாக அமைந்த படங்களாக வின்னர், கிரி, தலைநகரம் ஆகிய படங்கள் முக்கியமானவை. அந்த படங்கலில் நடித்த கைப்புள்ள, வீரபாகு மற்றும் நாய் சேகர் ஆகிய கதாபாத்திரங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. இந்த படங்களில் எல்லாம் இயக்குனர் சுந்தர் சி க்கு முக்கியமான பங்கு உண்டு. இவர்கள் இருவரின் காம்போவில் கடைசியா வந்த நகரம் படம் வெற்றி பெறாவிட்டாலும், வடிவேலு நகைச்சுவை காட்சிகள் பேசப்பட்டன.

இந்நிலையில் சுந்தர் சி மற்றும் வடிவேலு காம்பினேஷன் மீண்டும் இணைய உள்ளது. அவர்களின் ஹிட் படமான தலைநகரம் படத்தின் மூன்றாம் பாகம் தலைநகரம் 2 என்ற பெயரில் உருவாக இருக்கிறது. அதில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை முகவரி, நேபாளி மற்றும் 6 மெழுகுவர்த்திகள் ஆகிய படத்தை இயக்கிய வி இசட் தொரை இயக்க இருக்கிறார். அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெட்ரோ’ பட்ஜெட் 65 கோடி தான்.. ஆனால் சாட்டிலைட், டிஜிட்டலில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

ஸ்ரீலீலாவை கூட்டத்தில் கையை பிடித்து இழுத்த ரசிகர்.. கண்டுகொள்ளாத ஹீரோ..!

ஒரு டிக்கெட் 2 ஆயிரம் ரூவா! ஷோவை கேன்சல் பண்ணிக்கிறோம்! - Good Bad Ugly பட முதல் காட்சி ரத்து!?

என்ன ஸ்க்ரிப்ட் இது! ஹாலிவுட்டை அலறவிட்ட அட்லீ - அல்லு அர்ஜூன்! - சன் பிக்சர்ஸ் வெளிட்ட Announcement Video!

Good Bad Ugly ரன்னிங் டைம் இவ்ளோ நேரமா? தியேட்டரே சிதறப்போகுது! சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments