Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று லாஸ்லியா, இன்று சேரன்: தினமும் ஒருவரை குறி வைக்கும் மீரா

Webdunia
புதன், 10 ஜூலை 2019 (09:23 IST)
பிக்பாஸ் வீட்டில் கடைசியாக வந்து இணைந்து கொண்ட மீரா, தினமும் ஒருவரை குறிவைத்து அவர்களிடம் சண்டை போட்டு அவர்களின் இமேஜை கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முதலில் அபிராமி, பின்னர் வனிதா, அதன்பின் மதுமிதா, நேற்று லாஸ்லியா என ஒவ்வொருவரிடம் வம்பிழுத்து வந்த மீரா, இன்று சேரனிடம் வம்பு இழுக்கின்றார்.
 
'நான் வேலை செய்யாமல் எஸ்கேப் ஆகுவதாக என்னை குறிப்பிட்டு நீங்கள் சொன்னீர்கள் என்று மீரா கூற அதற்கு சேரன் மன்னிப்பு கேட்டார். அதன்பின்னர் இனிமேல் உன்னை வேலை செய்ய வா' என்று நான் கூப்பிட மாட்டேன், நீயாக வந்த வேலை செய்தால் நீ இந்த டீமில் இருக்கலாம் என்று சேரன் கூற உடனே நான் வேலையே செய்யாத பொண்ணு என்பதுபோல் கிரியேட் செய்ய வேண்டாம்' என்று கூறிவிட்டு சேரனின் பதிலை கூட கேட்காமல் உடனே எழுந்து சென்றுவிட்டார். 
 
பிக்பாஸ் வீட்டில் அமைதியாக இருக்கும் ஒருசிலரில் சேரனும் ஒருவர். ஆனால் அவரையே மீரா கோபப்படுத்திவிட்டார். வனிதாவின் கோபத்தில் கூட ஒரு வெகுளித்தனம் இருக்கும். ஆனால் மீரா திட்டமிட்டு, வேண்டுமென்றே ஒவ்வொருவரையும் டார்கெட் செய்து வருவதால் முதலில் வெளியேற்றப்படுபவர் மீராதான் என்று மக்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments