Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிகில் சிறப்பு காட்சி: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

Webdunia
வியாழன், 24 அக்டோபர் 2019 (22:14 IST)
தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு சில மணி நேரங்களே இருப்பதால் முதல் நாள் முதல் காட்சியை காண ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இப்போதே தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் குவிய தொடங்கிவிட்டதால் தியேட்டரில் மினி தீபாவளியை நடந்து கொண்டிருக்கிறது 
 
இந்த நிலையில் பிகில் படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசு இன்னும் அனுமதி கொடுக்காமல் இருந்ததால் விஜய் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர். இருப்பினும் படக்குழுவினர் தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இன்று இரவுக்குள் எப்படியும் அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைத்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது 
 
இதனையடுத்து தற்போது பிகில் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அவர்கள் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்துள்ளதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று பதிவு செய்துள்ளார் 
 
இதனால் தமிழக அரசு பிகில் படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி அளித்துள்ளது உறுதியாகி உள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருப்பதால் நாளை அதிகாலை முதல் காட்சிகள் தொடங்கும் என்பது உறுதியாகி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளருக்கு செலவு சுமை கொடுக்காமல் சம்பளம் வாங்கும் சல்மான் கான்.. தமிழ் நடிகர்களும் பின்பற்றுவார்களா?

பீரியட் படமாக இருந்தும் ‘பராசக்தி’ படத்தை வித்தியாசமாக படமாக்கும் படக்குழு!

சம்பளத்தை சொல்லி சன் பிக்சர்ஸையே ஓடவிட்ட அட்லி… அல்லு அர்ஜுன் படத்தில் நடந்த மாற்றம்!

சிம்பு 49 படம் தொடங்குவதில் தாமதம்… இதுதான் காரணமா?

வடசென்னை 2’ படத்தில் தனுஷ், வெற்றி மாறன் தான்.. தயாரிப்பாளர் மட்டும் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments