Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தில்லுக்கு துட்டு 2' படத்தின் அசத்தலான பர்ஸ்ட் சிங்கிள் பாடல்

Webdunia
ஞாயிறு, 13 ஜனவரி 2019 (13:50 IST)
நகைச்சுவை நடிகராக மக்கள் மனதில் இடம்பெற்ற சந்தானம் தற்போது கதாநாயகனாக ஒருசில படங்களில் நடித்து வருகிறார். சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடித்த 'தில்லுக்கு துட்டு 2' படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் 'தில்லுக்கு துட்டு 2' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'மவனே யாரு கிட்ட' என்று ஆரம்பிக்கும் இந்த பாடலை கானா வினோத் மற்றும் ஷபீர் எழுதியிருக்க ஷபீர், கானா வினோத் மற்றும் யாமினி பாடியுள்ளனர். இந்த பாடலை ஷமீர் கம்போஸ் செய்துள்ளார்.

'தில்லுக்கு துட்டு' முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலா இயக்கியிருக்கும் இந்த படத்தில் சந்தானம், ஷரிதா ஷிவதாஸ், ராஜேந்திரன், பிபின், ஊர்வசி உள்பட பலர் நடித்துள்ளனர். தீபக்குமார் ஒளிப்பதிவில் ஷபீர் இசையில் செஞ்சி மாதவன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் திரைப்படமும் விரைவில் திரைக்கு வர தயாராக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments