Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்றே சொன்ன ரஜினி… டுவிட்டரில் டிரெண்டிங்… ரசிகர்கள் கொண்டாட்டம்

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (16:54 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என தமிழக அரசு விதித்த தடை தொடரும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினி சில நாட்களுக்கு முன் செய்தியாளர்கள் பேசிய ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இதுகுறித்து ரஜினி ரசிகர்கள் அன்றே சொன்ன ரஜினி என்ற ஹேச்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

அந்த வீடியோவில், இத்தனைப் பேரை பலிகொண்ட ஸ்டெர்லைட் மீண்டும் ஆலையை திறக்கக் கூடாது. இதுக்கும் மேல ஆலையை திறக்கனும்னு நினைத்தால் அவங்கள மனுஷங்களே கிடையாது. மக்கள் சக்தி ஜனசக்தி ஜெயிக்கும் என தெரிவித்தார்.

இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளதால் ரஜினி ரசிகர்கள் ரஜினியின் கருத்துக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments