Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை.. முதல்வருக்கு நன்றி! – சூர்யா மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (16:53 IST)
சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படம் குறித்து முதல்வர் வாழ்த்தியதற்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கான நீதியை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில் ஜெய்பீம் படத்தை பார்த்ததாக அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெய்பீம் படத்தில் இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் துயரங்களை துல்லியமாக காட்டியுள்ளதாகவும், அதில் பல காட்சிகள் மிசா காலத்தின் தான் சிறையில் இருந்தபோது நடந்தவற்றை நினைவுப்படுத்தியதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் சூர்யா “வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் படத்தை நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments