Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படப்பிடிப்புக்கு அனுமதி… அடுத்த கட்டப் படப்பிடிப்பை தொடங்கும் சூர்யா 40 படக்குழு!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (08:27 IST)
தமிழ்நாடு அரசு திரைப்படங்களின் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் சூர்யா 40 படக்குழு விரைவில் படப்பிடிப்பை தொடங்கி முடிக்க உள்ளதாம்.

சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.  இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அரசு கட்டுபாடுகளோடு திரைப்படங்களின் படப்பிடிப்பை தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. அதையடுத்து சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு  ஜூலை 2 ஆம் வாரம் முதல் புதுக்கோட்டையில் தொடங்க உள்ளதாம். அதுமட்டுமில்லாமல் ஒரே கட்டமாக மீதமுள்ள காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ய் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

“2002 ஆம் ஆண்டு பாலிவுட் இருந்த மோசமான நிலையில் இப்போது தமிழ் சினிமா இருக்கிறது”- விட்னஸ் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்!

பிரபல டப்பிங் கலைஞர் தேவன்குமார் காலமானார்..! திரையுலகினர் அஞ்சலி..!!

இந்தியில் ரீமேக் ஆகும் பரியேறும் பெருமாள்… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments