Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிதாமகன் படத்துக்கு முன்பே அமீர் இயக்கத்தில் இணைந்து நடிக்க இருந்த விக்ரம் & சூர்யா!

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (14:37 IST)
இயக்குனர் பாலா விக்ரம்முக்கு சேது படம் மூலம், நந்தா படம் மூலம் சூர்யாவுக்கும் பிரேக் கொடுத்து அவர்களுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதன் பின்னர் இருவரையும் வைத்து பிதாமகன் என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தார். அதன் பிறகு இருவரும் இணைந்து வேறு படங்களில் நடித்ததில்லை.

ஆனால் பிதாமகன் படத்துக்கு முன்பாகவே அமீர் இயக்கத்தில் விக்ரம் மற்றும் சூர்யா ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருந்ததாக அமீர் தெரிவித்துள்ளார். அமீர் இயக்கிய முதல் திரைப்படம் மௌனம் பேசியதே. அந்த படத்தில் கதாநாயகனாக சூர்யா நடித்திருந்தார்.

ஆனால் முதலில் அந்த கதாநாயக வேடத்தில் முதலில் விக்ரம்தான் நடிக்க இருந்தாராம். அதே படத்தில் செகண்ட் ஹீரோவாக வரும் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில்தான் சூர்யா நடிக்க இருந்தாராம். ஆனால் சில காரணங்களால்  அந்த படம் அடுத்த கட்டத்துக்கு செல்லாத நிலையில் பின்னர்தான் சூர்யா நடிப்பில் உருவானதாம். இந்த தகவலை இயக்குனர் அமீர் தன்னுடைய சமீபத்தைய நேர்காணலில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் ஒரிஜினல் கதைகளில் கவனம் செலுத்த வேண்டும்… ரீமேக் வொர்க் அவுட் ஆகாது- ராஷி கன்னா ஓபன் டாக்!

ஏன் சாய் அபயங்கருக்கு இத்தனைப் பட வாய்ப்புகள் குவிகின்றன?.. இதற்குப் பின்னால் இப்படி ஒரு கணக்கு இருக்கா?

ஷாருக் கான் படத்துல நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்… ஷகீலா பகிர்ந்த தகவல்!

முதல் போஸ்டரே காப்பிதானா?.. வேலையைக் காட்டிய அட்லி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

தனுஷின் 56வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இயக்குனர், தயாரிப்பாளர் இவர்கள் தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments