Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு சினிமாவில் ஸ்ட்ரைக்… அதிகளவில் பாதிக்கப்படும் தமிழ்ப் படங்களின் ஷூட்டிங்!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (14:46 IST)
தெலுங்கு சினிமாவில் ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து காலவரையறையின்றி வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் புறநகர் பகுதியில் உள்ள திரையரங்குகளுக்கு டிக்கெட் விற்பனை பலமடங்கு அதிகமாக்கப்பட்டது. இதனால் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சம்பளம் ஆகியவற்றை குறைக்க சொல்லியும், டிக்கெட் விலையைக் குறைக்கவும் கோரி ஆகஸ்ட் 1 ஆம் தேதி வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

இதனால் அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருந்த பல தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் முக்கியமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெய்லர் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில் இந்த ஸ்ட்ரைக்கால் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகையிடம் தவறாக நடக்க முயற்சி.. போலீஸ் வந்ததும் தெறித்து ஓடிய அஜித் பட நடிகர்!

வரதட்சணை வாங்கி திருமணம் செய்தேனா? ரம்யா பாண்டியன் விளக்க வீடியோ..!

நடிகையை ஏமாற்றியதாக வழக்கு: ‘காதல்’ பட நடிகர் சுகுமார் மீது வழக்குப்பதிவு..!

’தக்லைஃப்’ படத்தில் சிம்பு தான் ஹீரோ.. கமல் சிறப்பு தோற்றம் தான்.. பிரபலம் கூறிய தகவல்..!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments