Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் கட்சி முடிவில் பின்வாங்கல்… எஸ் ஏ சியின் மனமாற்றத்துக்கு காரணம் இவர்தானாம்!

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (11:21 IST)
விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஆரம்பிக்க இருந்த கட்சி குறித்த முடிவில் அவர் பின் வாங்கியதற்கு விஜய்யின் தாயார் ஷோபாதான் காரணமாம்.

சில நாட்கள் முன்னதாக நடிகர் விஜய் பெயரில் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் புதிய அரசியல் கட்சி தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனக்கும் அந்த கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லையென்று விஜய் அறிவித்தார். தொடர்ந்து விஜய்யின் தாயார் ஷோபா கட்சி பதவியிலிருந்து விலகிய நிலையில், கட்சி தலைவராக அறிவிக்கப்பட்ட ஏ.கே.ராஜாவும் பதவி விலகினார்.

இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர் நடிகர் விஜய் பெயரில் தொடங்கப்பட்ட கட்சி மீது விஜய்க்கு அதிருப்தி உள்ளதால் கட்சியின் பெயரை பதிவு செய்ய வேண்டாம் என கடிதம் எழுதியதாக சொல்லப்பட்டது.

எஸ் ஏ சியின் மனமாற்றத்துக்கு விஜய்யின் தாயார் ஷோபாதான் காரணம் என சொல்லப்படுகிறது. எஸ் ஏ சியின் செயல்களால் கடுமையாக அதிருப்தியடைந்த ஷோபா அழுத்தம் கொடுத்து எஸ் ஏ சியிடம் பேசிய பின்னர்தான் அவர் தனது முடிவில் இருந்து பின்வாங்கியதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments