Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“என் படத்தை அப்போதே கொண்டாடி இருந்தால்…” ஆயிரத்தில் ஒருவன் குறித்து செல்வராகவன் ஆதங்கம்!

“என் படத்தை அப்போதே கொண்டாடி இருந்தால்…” ஆயிரத்தில் ஒருவன் குறித்து செல்வராகவன் ஆதங்கம்!
, திங்கள், 3 அக்டோபர் 2022 (15:10 IST)
செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளியானது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான செல்வராகவன் கார்த்தி இயக்கத்தில் உருவாக்கிய சாகச திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்ம். அந்த படம் ரிலீஸின் போது பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் இப்போதுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிரது. இந்நிலையில்  செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தின்  இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக தகவ தெரிவித்து, இதன் போஸ்டரை புத்தாண்டுப் பரிசாகத் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிட்டார் செல்வராகவன்.

ஆனால் அந்த திரைபடம் 2024 ஆம் ஆண்டுதான் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், இயக்குனர் செல்வராகவன் “என்னுடைய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை அப்போதே கொண்டாடி இருந்தால் தொடர்ந்து மேலும் சில பாகங்கள் உடனே வெளியாகி இருக்கும்” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யோகி பாபு கதை எழுதி நடிக்கும் படம்…. பூஜையோடு தொடக்கம்!